பெண்களை...
இன்னும் எத்தனை காலம்தான்
ஒரே நாளில் வாடும் மலரோடும்,
பகலில் மறையும் நிலவோடும்,
எங்கோ சென்று சங்கமிக்கும் நதியோடும்,
எதையாவது பற்றி ஏறும் கொடியோடும்....
தண்ணீரை விட்டு வெளியேறினால்
மரணிக்கும் மீன்களோடும்.....
அனைவரின் காலடி படும் பூமியுமாய்...
தன்னை கொல்ல வரும் விலங்கினதைக்
கண்டு மருண்டு போகும் மான்களோடும்
ஒப்பிடுவீர்கள்?
இனியாவது பெண்களை...,
தேசத்திற்கு வெளிச்சமளிக்கும் விளக்காய்...
அதை ஏற்ற பயன்படும் தீக்குச்சியாய்....
அதர்மத்தை அழிக்க வந்த அக்னியாய்.....
பொங்கியெழும் பூகம்பமாய் ....
அன்பு காட்டுவதில் சூறாவளியாய் .....
நியாயத்தை நிலை நாட்டுவதில் சுனாமியாய்....
ஒப்பிட்டுப் பாருங்கள்..!!!!!!!!!
அக்கா கவிதை சிங்கம் நீங்க
ReplyDeleteநான் இப்பொழுதுதான் தவழ ஆரம்பித்திருக்கும் குழந்தை தம்பி..தங்கள் கருத்துக்கு நன்றி..
ReplyDelete