முகப்பு...

Monday 12 September 2011

வெட்டியான்



இடுகாட்டில் பிணத்தை எரிக்கும்
வெட்டியான்.,
நிறைவேறா ஆசையுடனும், வேகாத நெஞ்சுடனும்
எரிந்தும், எரியாமலும்
மேலெழும்பும் சவத்தை,
தடியால் தட்டி எரிக்கும் காட்சி..,

வாழும்போது வாங்கிய அடி போதாதென.,
இறந்தபின்னும் எவனோ ஒருவன்
நம்மை அடிக்க..இறந்தும் அடிவாங்கும்
ஈனப்பிறவியா நம்முடையது???

நித்தமும் பிணத்தை எரித்து,
இறப்பிற்கு பிறகு,
எதையும் எடுத்துச்செல்ல முடியாது
என்ற வாழ்க்கை சூட்சுமத்தை உணர்ந்தும்.,

தன் வாழ்ககைக்காக..
அடுத்தவன்
மரணத்தை எதிர்நோக்கி இருக்கும்
வெட்டியான்!!!!!    
இதுதான் வாழ்க்கையா??


No comments:

Post a Comment

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__