முகப்பு...

Tuesday 13 December 2011

ஆன்ம சினேகம்....!!!


மனதை மனம் விரும்புவதால்
மனதை மட்டும் விரும்பும் மனதை,
மனம் விரும்பி,
மனதை விரும்பிய மனதால்.
மனதை விரும்பும் மனதை.
மனம் விரும்புவது...
ஆன்ம சினேகம்..!

தாயாக உனை தாலாட்ட முடியும்
நம் ஆன்ம சினேகத்தால்..

தந்தையைப் போல் உரிமையுடன் கடிந்துகொள்ள முடியும்
நம் ஆன்ம சினேகத்தால்..

சகோதரிபோல் செல்லமாய்  சண்டையிட  வைக்கும்
நம் ஆன்ம சிநேகம்..

குழந்தையைப்போல் உன் மடியில் உறங்க முடியும்..
நம் ஆன்ம சினேகத்தால்..

மந்திரிபோல் ஆலோசனைக் கூறமுடியும்
நம் ஆன்ம சினேகத்தில்..

நண்பனைப்போல் நேசம் காட்ட வைக்கும்
நம் ஆன்ம சினேகம்..

அன்பு காட்டி அரவணைக்க முடியும்..
நம் ஆன்ம சினேகத்தால்..

எல்லாம் முடியும் நம் ஆன்ம சினேகத்தில்..

கட்டியணைக்க முடியாது..
கட்டிலில் அணைக்க முடியாது..


4 comments:

  1. குழந்தையைப்போல் உன் மடியில் உறங்க முடியும்..
    நம் ஆன்ம சினேகத்தால்.கட்டியணைக்க முடியாது..
    கட்டிலில் அணைக்க முடியாது..-அருமை காயத்ரி
    .

    ReplyDelete
  2. Replies
    1. அறுமையான பதிவு மனதிற்க்கு மிக்க மகிழ்ச்சி

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__