முகப்பு...

Wednesday 28 December 2011

காதல் முரண்பாடு.....

அந்திநேரம்...
மனமது.,
அகமுடையவனின் அங்கமெல்லாம்
முத்தமழைப் பொழிய...

அவன் கேசங்களில்
கொஞ்சி விளையாடும் என் விரல்கள்...

அவன் தலைசாய்த்து இளைப்பாற
என் மடிகொடுத்து...
பிரபஞ்சத்தையே பேசித் தீர்த்து...
அவன் மனமதை மகிழச்செய்து..
என்னவனின் முகத்தைப்
பார்வையால் விழுங்கி.,
அவன் மடிசாய்ந்து.,
நான் கனவில் மிதக்க..
நிலவானவள் பொறாமையில் எனை நோக்க..

நான் வெட்கி அவன் மடியில்
முகம் புதைக்க..
அவன் மெல்ல என் மேனி தழுவ..
தழுவும் அவன் கரங்களில்
துவளும் என் தேகம்...

இதழை, இதழால் சுவைக்கும்
வித்தையறிந்து  என் இதழ் சுவைக்க...

காதல் இரசம் ஒழுகும்.,
அவன் விழி நோக்கும் என் விழி
உறங்குகிறதா..?
உல்லாசத்தில் உழலுகிறதா..?

எனை மயக்கும் வித்தையறிந்து..
என் மேனிசாய்க்க.,
மண்ணும் மலராய்த் தோன்றுகிறது..

எனை முத்தமழையில் நனைக்க..
நிலவை நோக்கியபடி நான்....

அவனுக்காய் நிலவும் மறைகிறாள்..
மனம் முழுதும் வியாபித்திருக்கும் அவன்..
உடலையும் ஆக்கிரமிக்க...

அங்கமெல்லாம் பரவி...
தேகம் இறுக்கி..
என் இடை நொறுங்கும் சத்தம்
இனிமையான இசையாய்...
அவன் மூச்சுக்காற்றின்.,
உஷ்ணம் தணிக்க நிலவின் குளுமை...!!


அனைத்தும்..
ஊமை கண்ட கனவாய்..

மனதில் அக்னியாய் எரியும் காதலை.,
தண்ணீர் ஊற்றி தணிக்க நினைப்பது எது...??

தண்ணீராய்..........

வெட்கம்.....?? சமூகம்.....??
கலாச்சாரம்.....?? சூழல்.....??
அவன்......??

அக்னியை தண்ணீர் அணைக்குமா.....??
தண்ணீரையும் பற்றி முன்னேறுமா அக்னி....??!!

விடையறியாமல்...
விடையறிய...
விடைகளுக்காய்..
விடையைத் தேடி நானும்....!!!??



















4 comments:

  1. தண்ணிர் ஆவி ஆகும்!

    ReplyDelete
  2. @உஸ்மான்...ஹஹஹா...நல்லது தோழரே..ஆவியாகட்டும்..

    ReplyDelete
  3. @மலர்...நன்றி தோழி கருத்துப் பகிர்விற்கு...:):)

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__