முகப்பு...

Monday 19 March 2012

சுகமான சுமைகள்..!



பிஞ்சுப் பருவத்தில்
பெற்றோரின் அன்பைச் சுமந்து.....,
உடன்பிறப்பின் பாசத்தை சுமந்து.....,
பள்ளிப் பருவத்தில்
புத்தகத்தை சுமந்து.....,

வளரும் பருவத்தில் நட்பை சுமந்து......,
பருவத்தில் காதலை சுமந்து......,


படித்து பட்டத்தை சுமந்து.....,
நல்ல பணியைச் சுமந்து.....,
ஊழியர்களின் பாசத்தை சுமந்து.....,

கணவனின் தாலியைச் சுமந்து.....,
கணவர் வீட்டாரை சுமந்து.....,
பொறுப்பானவள், பொறுப்பற்றவள்
என்ற பெயரைச் சுமந்து.....,
இன்னல்கள் பல சுமந்து.....,
கருவைச் சுமந்து.....,

சுமந்து, சுமந்து சுமந்தே பழகிய நீ….
உன் சிசுவிற்கு
இரத்தத்தையே பாலாய் புகட்டினாய்
அன்பை கொடுத்தாய்..
உழைப்பை அளித்தாய்..
விருப்பு, வெறுப்புக்களை விடுத்தாய்..

குழந்தைக்கு கல்வி அளித்தாய்..
நல்ல தோழமையாய் விளங்கினாய்..
பருவமடைந்ததும்,
பாதுகாப்பை அளித்தாய்..
அவளுக்கு ஒரு துணையை தேர்ந்தெடுத்தாய்...

அவள் சுமந்த கருவுக்கு.,
நீ தாயானாய்..
தாயாய் உன் பணி தொடர்ந்தாய்..

சுமந்தும், கொடுத்தும், சுமந்தும்...
..
இதுதான் சுகமான சுமையோ...??

சுமையையும் சுகமாய் எண்ணும்
நீயும்
தொடர் கதையாய்.......






No comments:

Post a Comment

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__