முகப்பு...

Wednesday 4 April 2012

வளர்ச்சியா...?? வீழ்ச்சியா...??



அன்று....
ஐந்து வயது வரை
அன்னையின் பாலருந்திய நீ.,
இன்று....
ஐந்து மாதத்தில்
அண்டை, அசலாரிடம்
புட்டிப் பால் குடிக்கிறாய்...


அன்று..  
துள்ளிக்குதித்து பள்ளி சென்ற நீ..
இன்று..
தூக்கம் கலையாமல் செல்கிறாய்..

அன்று..   
தலைவாரி, பொட்டிட்டு பூச்சூட்டி
அழகாய் காட்சியளித்த நீ..
இன்று..
விரித்த தலையும், வெறும் நெற்றியுமாய்
காட்சியளிக்கிறாய்..

அன்று..  
பள்ளிக்கு சென்று மனம் பண்பட்டு வந்தாய்..
இன்று..
பள்ளிக்கு சென்று மனம் புண்பட்டு வருகிறாய்..

அன்று..  
பொம்மை சுமந்த கைகள்
இன்று..
புத்தக மூட்டையைச் சுமக்கிறது..

அன்று
நீ விளையாட பட்டம்..
இன்று
உன் விளையாட்டிற்கு பட்டம்..
அன்று..  
பத்து வயதிலும் பால்மனம் மாறா
பச்சிளங்குழந்தையாய் நீ..
இன்று..
கணினியில் கருத்துப் பரிமாற்றம்

அன்று..  
பருவமாற்றத்தால் பள்ளிப் படிப்பை நிறுத்தினாய்..
இன்று..
பருவமடைந்தும் பட்டங்கள் பல வெல்கிறாய்..

அன்று..  
அந்நிய ஆணிடம் பேச அய்யப்பட்டாய்
இன்று..
அசாதாரணமாய் ஆண்களின் நட்பை
அளவின்றி கொள்கிறாய்..

அன்று..  
அந்திப் பொழுதில் வெளியேற
அனுமதி கேட்டாய்..
இன்று..
அதிகாலை வீடு திரும்பி
அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறாய்..

அன்று..  
அன்னை, தந்தை பார்த்தவனை
அவதாரப் புருசனாய் ஏற்றாய்,,
இன்று..
இணையத்தில் இணை தேடிக்கொள்கிறாய்..

அன்று..  
அகமுடையவன் பெயரை அழைக்க நாணினாய்..
இன்று..
அகமுடையவனை அனைவரும் அறிய
அடாஎன அழைக்கிறாய்..

அன்று..  
மகளாய், சகோதரியாய்..
மருமகளாய், மனைவியாய்
சிறப்புடன் பதவிவகித்தாய்..
இன்று..
நாடாளுகிறாய்..
நட்சத்திரத்திரமாய் விளங்குகிறாய்
விண்வெளியில் பயணிக்கிறாய்..

அன்று..  
மருமகளை மகளாய்க் கண்டாய்..
இன்று..
பணம் காய்க்கும் இயந்திரமாய் காண்கிறாய்..

அன்று..  
குழந்தைப் பேற்றை வரமாய் நினைத்தாய்..
இன்று..
குழந்தை வேறா என நினைக்கிறாய்..

அன்று..  
என்ன குழந்தையென எதிர்பார்த்து ஆவலாய்....
இன்று..
பெயரையும் பிறப்பிற்கு முன் முடிவுசெய்தபடி.....

அன்று..  
அன்னையின் வலியுணர்த்திப் பிரசவித்தாய்...,
வலியில்லா வாழ்வு பெற்றாய்..
இன்று..
உன் வலியறியாமலிருக்க
விரும்பியவாறு பெற்றெடுத்து..
அன்னைவலியுணரா பிள்ளையுடன்
வலியுடனே வாழ்கிறாய்..

அன்று..  
ஆயிரங்காலத்துப் பயிராய் இருந்த திருமணம்
இன்று..
கேள்விக்குறியாய்..
துரித உணவாய்...

அன்று..  
அடுத்தவர் நுழைய முடியா அந்தரங்கமாய் வாழ்வு..
இன்று..
அனைவரும் வேடிக்கை பார்க்கும் விதமாய்....

அன்று..  
அகமுடையவன் பற்றி
அன்னை கூட அறியமாட்டாள்
இன்று..
அவன்மேல் பக்கம் பக்கமாய் குற்றப்பத்திரிக்கை..

அன்று..  
எவரும் பிரிக்கமுடியா  இணையாய் இறுதிவரை...
இன்று..
எடுப்பார் கைப்பிள்ளையாய் நீ..
எதற்கும் துணிந்து எடுத்து வீசுகிறாய் தாலியை...!!!

பெண்ணே...
இதுதான் நீ கண்ட வளர்ச்சியா..??

நீ கண்டது..
வளர்ச்சியா...?? வீழ்ச்சியா...??





2 comments:

  1. Replies
    1. @ராஜேஷ்....தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தோழமையே...:)

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__