முகப்பு...

Monday 7 May 2012

விடியலை நோக்கி....




தமிழ்த்தாயின் ஆசிபெற்று
கலைமகளின் அருள்கொண்டவனை
அதிர்ஷ்டம் அணுகாதது ஏனோ...??




கல்லூரியில் இடம்கிடைக்க காலத்தால்
அலைக்கழிக்கப்பட்டு..
படிப்பில் முதலானவனை
பதவியும் பின்னுக்குத் தள்ளியதே....!!

என்மன அமைதிக்குதவா
மருத்துவத்தை
நானுமறிந்து பயனென்ன..??

அரிய கலைகள் பலகற்றும்
அவனியில் ஒளிரா விளக்காய்
விளங்காமல்
அண்டசராசரமும் வியக்கும்வண்ணம்
நானும் திகழ்வேனே......

ஆரூடம் கூறும் எனக்கு
ஆறுதல் கூறவும் ஆளில்லாமல்
நானறிந்த ஜாதகம்
எனக்கு சாதகமற்றுப்போனாலும்
சாதிக்காமல் விடுவேனோ.....??!

இரசிகனாய் இரசித்து
கவிஞனாய் திகழவிரும்பியவனை...
கலையுலகமும் அலட்சியப்படுத்த
என் கவித்திறனும் வலுமைகொண்டதே.....!

கர்ணனின் உயிர் காக்கா
கவசகுண்டலமாய்
வித்தைகள் பல கற்றும்..
காலதேவன் எனைக்கைவிட
கரைசேரா கப்பலாய் தவிக்காமல்
கலங்கரை விளக்காய் அமைவேன் நானும்...!!

நாலுபடி ஏறவே
எட்டுபடி இறங்குகிறேன்..
வெற்றிக்கு வித்தாகும் என் வீழ்ச்சியுமே.....!!

தோல்வியுமெனை
தோள்பிடித்துத் தூக்கியே
வெற்றிப்படியில் ஏற்றுகிறதே..........!!

அம்புப்படுக்கையில் அயர்ந்த பிதாமகனாய்
இளமையில் அமைந்த முள்படிக்கையை
விரும்பியே ஏற்றேன்....
முதுமையில் அமையும் மலர் படுக்கைக்காய்...!!!

அந்திநேர ஆதவனாய்
வெற்றித்திருமகளும் மறைந்திருக்க
கதிரவனைக் கண்ட பனித்துளியாய்
கரையுமே என் கவலைகளும்......

விடியும் நாளையென
விடியலுக்காய்  காத்திராமல்
விதிக்கும் விதிசெய்து
விடியலையும் வசப்படுத்தி
விடியச்செய்வேன்……..!!!


4 comments:

  1. கவிதை அருமை...
    தொடருங்கள்.

    ReplyDelete
  2. ///விதிக்கும் விதிசெய்து
    விடியலையும் வசப்படுத்தி
    விடியச்செய்வேன்……..!!!///
    அருமை...நன்றி,

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி..:)

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__