முகப்பு...

Wednesday 27 June 2012

மௌனம்....!!!


மௌனத்தையடைய 
மௌனமாய் மௌனத்தை நாட....
மௌனத்தையடையுமுன்
மௌனத்தையறிந்து மௌனத்தை நாடினால்
மௌனத்தை அடைவதெளிதாகுமே....!!


மௌனமென்பதென்ன..?
மௌனமாய் இருப்பது மௌனமா...?
மௌனமென உணர்வது மௌனமா....?

நானிருப்பது மௌனமா..?
மௌனத்தில் நானிருக்கிறேனா..?

மௌனத்தை நாடிய எனை
மௌனம் மௌனமாய் வினவ...
மௌனத்தையடையும் முயற்சியில் 
மௌனமாய் நானும்....!!!

2 comments:

  1. //மௌனத்தை நாடிய எனை
    மௌனம் மௌனமாய் வினவ...
    மௌனத்தையடையும் முயற்சியில்
    மௌனமாய் நானும்....!!!//

    அருமையான வரிகள்.
    மௌனம் மௌனம் என்று கடைசி வரை மௌனத்தை கலைக்கவேயில்லையே அக்கா.

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா..குமார்...விரும்பியேற்ற மௌனத்தை கலைக்க விருப்பமில்லாமல் மௌனமாய் தொடர்கிறது என் மௌனம்...:)

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__