முகப்பு...

Wednesday 4 July 2012

அழமாட்டேன் போ..



குதூகலமாய் இருக்கும் வயதில்
குழந்தைத் தொழிலாளியாய் 
வலம் வரக் 
கரையாத நான்...

ஊனமுற்ற உடலால்
உள்ளமும் கரைவேனோ...??


எண்ணிய படிப்பு 
எட்டாக்கனியாய் கிட்டாது போக
கரையாத நான்..

விரும்பிய வாழ்வு 
எனை விரும்பாமல் போக
கரையாத நான்..

அன்புக்குரியவர்கள் 
அந்நியர்களாய் மாற
கரையாத நான்...

அன்பைக் கற்றுக்கொடுத்தவன்
இன்று 
அலட்சியத்தையும் 
கற்றுக்கொடுக்க.......
காட்டாற்று வெள்ளமெனக் 
கரைவேன் என நினைத்தாயோ...?

எனக்குள் நம்பிக்கை 
விதைவிதைத்து
சிந்தனை சிறகடிக்க வைத்த 
நீ
விலகி நின்று வேடிக்கைப் பார்க்க
கரைவேன் என நினைத்தாயோ...??

நம்பிக்கையின் நாயகன்
எனக்குள் 
நீ 
விதைத்த விதை விருட்சமாகி
என் சிந்தனை....
சிகரத்தையடைந்து
நான்
ஆனந்தக்கண்ணீர் சிந்துமுன்
அழமாட்டேன் போ...!!





2 comments:

  1. கண்ணீரை உடைக்கும் கந்தக கவி

    ReplyDelete
  2. @தமிழ் கனல்....வருகைக்கு நன்றி தோழரே...:)

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__