முகப்பு...

Monday 9 July 2012

கந்தர்வக் கரு.....



மனதாள்பவனின் மனதை 
மனதில்
மனதால் சுமப்பவள்.. 
காதலில் தோன்றி
காலத்தினால் அழிக்கவியலா
கர்ப்பமிதை...

உணர்வை
உணர்வோடு உணர்வாய் உணர்ந்து
உள்ளத்தில் சுமக்க..

எண்ணத்திற்குக் கருவானவன்..
எழுத்திற்குக் கருவாகி
என்
கருவிற்கும்  கருவாகி
கருவின் கருவில்
கருவாய் உருவாகிறான்...

மசக்கையுற்ற மனமது
மன்னவனைத் தேட..
மனதிலுள்ளவனோ...
இரட்டைக்கிளவி,
மரபுக்கவிதையென
கவிதை சமைக்க..
என் மசக்கையும்
மாயமாய்ப் போனதே...!!

புதுக்கவிதையு மெனக்குப்
புத்துணர்வூட்ட...

வலுவிழந்த கால்களுக்கு
வெண்பாவும் வலிமையூட்ட...

பிரபஞ்சத்தைப் பார்வையிட
பிறக்கப்போகும் பிள்ளைக்கு
அவன் பண்பாடி.
பிரசவ வலியையும்
பொய்க்கச்செய்து.....
கத்தியின்றி, இரத்தமின்றி
தாயுமானவனாகி 
பிரசவம் பார்த்து
மணாளனே மருத்துவனுமாகிறான்......!!









No comments:

Post a Comment

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__