முகப்பு...

Wednesday 14 November 2012

நான் கண்ட தீபாவளி...!!!


வண்ணமடித்த வீடுகளை
சன்னல்களும்,சோபாவும்
புத்தாடையணிந்து அழகூட்ட..

தீபாவளித் தள்ளுபடியில்
விரும்பியழைத்த விருந்தாளிகளாய்
வீட்டு உபயோகப்பொருட்கள்..

சாமந்தியும், ரோசாவும்
சரம் சரமாய் கதவுகளை அலங்கரிக்க..

கோலங்களில் மலர்ந்த மலருக்கு
வண்ணமடித்து...

கண்ணாடிப்பாத்திரத்து நீரில்
கண்ணுக்கழகாய் நீச்சலடித்து
மனம் கவரும் மணம்வீசும் மலர்கள்...

வானவில்லுக்குப் போட்டியாய்
வண்ண வண்ண விளக்குகள்
வீடுகளிலும், வீதிகளிலும் ஒளிர..

மேகத்தை முற்றுகையிடும்
பட்டாசுப்புகைகள்..
ஆகாயத்தில் அரங்கேறும்
வானவேடிக்கையில்
இடியும், மின்னலும்
இருக்குமிடமறியாதுபோக...

எங்கும் கண்ணைப்பறிக்கும்
வண்ண உடைகள்..
அலங்கார விளக்குகள்..
வெ(இ)டியோசை...
இறைந்துகிடக்கும் காகிதங்கள்...

மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும்
குழந்தைகள்..
பட்டாசுகளோடு பவனிவரும் இளைஞர்கள்
இனிப்புவகைகளை இங்குமங்கும்
எடுத்துச் செல்லும் மகளிர்களென
தெருவெங்கும் காட்சியளிக்க...

இத்துனை மகிழ்ச்சியினிலும்
ஏதோ ஒரு இழப்பை உணர்கிறது மனம்...

இரண்டுநாள் முன்பே
இங்குமங்கும் அலைந்து
மருதாணிப்பறித்து மைய அரைத்து
கரங்களை அலங்கரிக்கும் பெண்களில்லாமல்..

அதிகாலையெழுந்து எண்ணெய்த்தேய்த்து
புத்தாடை உடுத்தி
அண்டை அசலாருக்கு
அவர்தம்வீட்டுப்பலகாரங்களை மகிழ்வாய்ப்பகிர்ந்து..
தன்வீட்டுப்பலகாரத்தைப்பட்டியலிட்டு..
புத்தாடையெடுத்த வரலாற்றைப் பேசும்
பெண்களின் குரல்களும்,
குழந்தைகளின் குதூகளமும் இல்லாமல்..

பெரியவர்களின் காலில் விழுந்துவணங்கி
அவர்கொடுக்கும் பணத்தைப் பொக்கிசமாய்
பாதுகாக்காமல்..

பூக்கூடையெடுத்து குடும்பத்தோடு
கோயிலுக்கு செல்லாமல்..

பலவீட்டுப்பலகாரத்தில் ருசிபார்த்து
இது நல்லாருக்குனு சுவைத்துப்பார்த்து தனக்கென
எடுத்துவைக்கும் குழந்தைகளின் செயல்களில்லாமல்..

இருப்பவர்க்கு இருப்பவர்
தகுதியறிந்து தரம்பிரித்துக் கடையில் வாங்கிய
அலங்கார அட்டைப்பெட்டியில் அடங்கியிருக்கும்
உலர்ந்த பழங்களும், இனிப்புகளும்
எள்ளிநகையாடுகின்றன சுவைப்பவர் இன்றி...!!



4 comments:

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__