முகப்பு...

Thursday 8 November 2012

வீடு..


பாசமெனும் கல்லும்,
மண்ணுமெடுத்து..
வியர்வை நீரூற்றிக்குழைத்து..
உள்ளத்து உணர்வுகளுக்கு
அழகிய உருவம் கொடுத்து
உயிரோட்டமாய் வீடமைக்க...

இல்லாள் இல்லா இல்லம்
இல்லமுமாகும...
??

இன்முகத்துடன்
இனியவளாய் இல்லாள் அமைய
வண்ணமிகு சுவற்றினிலே
வாஞ்சையாய்
கிறுக்குவதற்கு
மழலைச்செல்வங்களும்....

வாழ்க்கையில் வழிகூற
வயோதிகப் பெற்றோரும்
உடனிருக்க...

நேர்மைப்பாதையில்
நிமிர்ந்த நெஞ்சோடு
உழைத்துவரும்
ஆடவனின் இல்லத்தோட்டத்தில்

எங்கும் இன்பம் பூத்துக்குலுங்கும்
இன்பநாளுக்காய்
ஏக்கமுடன் காத்திருக்கிறேன்..!!

10 comments:

  1. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. நேர்மைப்பாதையில்
    நிமிர்ந்த நெஞ்சோடு
    உழைத்துவரும்
    ஆடவனின் இல்லத்தோட்டத்தில்...

    அழகான காத்திருப்பு .

    ReplyDelete
  3. ''...ஏக்கமுடன் காத்திருக்கிறேன்..!!''
    காத்திருத்தல் இனியதே
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், வாழ்த்திற்கும் மகிழ்ச்சியும், நன்றியும். தங்கள் வாழ்த்து எமது எழுத்தை வளப்படுத்தட்டும்.:)

      Delete
  4. இல்லாள் இல்லா இல்லம்
    இல்லமுமாகும...??
    //////////////

    அருமை மிக அருமை

    ReplyDelete
  5. வரிகள் சிறப்பு... பாராட்டுக்கள்...

    நன்றி...
    tm4

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்திற்கு நன்றி சகோ..:)

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__