முகப்பு...

Sunday 14 July 2013

நினைவுகள்...!!



நித்தமும் அவன்நினைவில் 
நனைந்திருக்கும் நான்
நினைத்துப்பார்க்கிறேன்...!!

அன்பின் இலக்கணத்தை அறியவைத்தவனை..
ஆன்மாவை அடையாளம் காட்டியவனை..
ஆசைக்கு வித்திட்டவனை..

இல்லத்தின் இன்பத்தினை எடுத்துரைத்தவனை..
ஈகை குணத்திற்கு எடுத்துக்காட்டாகியவனை..
உவகையில் எனை திளைக்கவைத்தவனை..
ஊக்கம்கொடுத்துவரும் உத்தமனை..

என்னை எனக்கு உணர்த்துபவனை..
ஏற்றம் அடைந்திட ஏணியாய் அமைந்திட்டவனை..
ஐயம் விளக்கியவனை..

ஒழுக்கத்தை ஓதுபவனை..
ஓடும் நதிபோல் களங்கமற்றவனை..
ஆயுதமெடுக்காது அன்பை மட்டும் போதிப்பவனை...

அவனறியா வேளையில் 
மௌனமாய் நானிட்ட முத்தத்தை...

அவன் கன்னத்தோடு கன்னம் உரசி
அவன் புஜத்தில் சிரம் வைத்து
கண்மலர் ரசித்து
இதயத்தில் என்னுள்ளத்தை 
ஓவியமாய் தீட்டியதை..

நானும், அவனுமான என்னுலகில்
என்னவனுக்கு அறிவித்திடாத
எண்ணற்ற ஆசைகளை
எடுத்துரைக்காமலே 
நினைத்துப்பார்க்கிறேன் நித்தமும்...

வார்த்தைகள் உணர்த்தா காதலை
உணர்வுகள் உணர்த்துமென
உணர்த்தாமலே காத்திருக்கிறேன்
நினைவுகள் நிசங்களாகும் தினங்களுக்காய் 
நினைவுகளுடனே வாழ்கிறேன் நித்தமும்....!!
 

2 comments:

  1. விரைவில் நினைவுகள் நனவாக வாழ்த்துக்கள்...

    உங்களின் தளம் அறிமுகம் : http://jeevanathigal.blogspot.com/2013/07/blog-post_14.html

    வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திற்கும், தகவலுக்கும் நன்றி சகோ..:) _/\_

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__