முகப்பு...

Thursday 23 January 2014

மௌனப்பயிர்கள்...!!


நேற்று..
மனதில்
தேனைப் பாய்ச்சிய வார்த்தைகள்
இன்று
அமிலத்தை வார்க்கலாம்...
அமிலத்தை வார்க்கும் வார்த்தைகள்
நாளை
தேனைப் பாய்ச்சலாம்....

இங்கு
நிரந்தரமில்லா
தேனும், அமிலமும்
மாறி மாறி பாயும் - மனதை
தேனில் மயங்க(கி)விடாமலும்..
அமிலத்தில் கருகிவிடாமலும்
பாதுகாக்க..
மனத்தோட்டத்தில்
மௌனப்பயிர்கள்
பயிரிடப்படுகின்றன...!!

மனிதனுக்கு
மௌனப்பயிர்களின்
அறுவடை நேரம்வரை காத்திருக்க
அவகாசமில்லை ...

சிலநேரம்
அறிந்தோ அறியாமலோ
பரித்தெறியப்படுகின்றன பயிர்கள்
அரை- குறையாய்...!

மீண்டும் மீண்டும்
மௌனப்பயிர்களை பயிரிடும் முயற்சிகள்
தொடர்கின்றன...!! :)


4 comments:

  1. தொடரட்டும்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வணக்கம்
    நேற்று..
    மனதில்
    தேனைப் பாய்ச்சிய வார்த்தைகள் இன்று
    அமிலத்தை வார்க்கலாம்...
    அமிலத்தை வார்க்கும் வார்த்தைகள் நாளை
    தேனைப் பாய்ச்சலாம்

    நல்ல கருத்தாடல் மிக்க வரிகள்.... மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ...வணக்கம்..மிக்க நன்றி..:)

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__