முகப்பு...

Tuesday 1 July 2014

காதல் கிறுக்கல்...

தன்னையும், என்னையும் 
எண்ண நேரமில்லா நீயும்..
உன்னையே எண்ணும் நானும்...
வார்த்தை தவிர்த்து..
மௌனத்தில் மனம் பகிர்ந்து...
கண்களில் காதல்பேசி..
நாலாறுமணியும் நகராதமர்ந்து...
இருமனம் ஒன்றாகிக் கனியும்
காலத்தை எதிர்நோக்கியேக்
காத்திருக்கும் காதல்..!! 


*********
அறிவுச்சிறையிலிட்டாலும்
மனக்கதவை உடைத்து
வார்த்தைக்கு
முற்றுப்புள்ளிவைத்து
சுதந்திரக்காற்றை சுவாசிக்கிறது
கண்ணீர்முத்துக்கள்...!! 

*******

13 comments:

  1. கவிதைகள் இரண்டும் அருமை அக்கா...

    ReplyDelete
  2. அற்புதம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. கவிதைகள் இரண்டும் அருமை

    ReplyDelete

  4. வணக்கம்

    கண்ணாடி காட்டுகின்ற கண்ணன் முகத்தழகில்
    பண்கோடி தோன்றும் பறந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. கவிஞரின் கவித்துளிகள் அழகு..

      Delete
  5. உணர்வுகள் தொடும் உயிருள்ள கவிதை!
    பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி தங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும். :)

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__