முகப்பு...

Tuesday 25 November 2014

தமிழ்க்குடில் அறக்கட்டளை இரண்டாமாண்டு அறிக்கை - 2013-14


அன்புத்தோழமைகளுக்கு,


தமிழ்க்குடில் அறக்கட்டளையின் இரண்டாமாண்டு அறிக்கையை உங்கள் முன் சமர்பிப்பதில் பெருமகிழ்ச்சிஅடைகிறோம்தொடரும் நமது பயணத்தில் தொடர்ந்து முழுமையான ஒத்துழைப்பு நல்கிபேராதரவுடன்நட்புகள் வழங்கிவரும் உற்சாகத்துடன் குடில் தனது பயணத்தில் அடுத்தகட்ட அறப்பணியை நோக்கிபயணிக்கிறது என்பதையும் அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்நம்முடைய அனைத்து முயற்சிகளுக்கும்தேவையான உதவிகளைஎந்த நேரத்திலும் சிரமம் பாராமல் வழங்கி கொண்டிருக்கும் அன்புத்தோழமைகள்அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை நவில்கின்றோம்தமிழ்க்குடில் சிறப்பாக செயலாற்றிடஅடிப்படையாக தோழமைகளின் அயராத உழைப்பும்பங்களிப்பும்ஒத்துழைப்பும் மட்டுமே பேருதவியாகஇருக்கிறது என்பதை மட்டற்ற பெருமகிழ்வுடனும்நன்றியுடனும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அறப்பணியில் தமிழ்க்குடில்:
நூலகம் திறப்பு:
தமிழ்க்குடில் அறக்கட்டளையால் சென்ற ஆண்டு கட்டப்பணித் துவங்கப்பட்டுஇந்த ஆண்டில் முழுமைபெற்றதும்அதன் திறப்புவிழா ஏற்பாடு செய்யப்பட்டு, 2013 செப்டம்பர் திங்கள் 9ம் நாள் அன்று சிறப்பாகநடைபெற்றதுஅதன் விபரம் பின்வருமாறு:
09-09-2013 திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு தமிழ்க்குடில் அறக்கட்டளையின் நிறுவனர் திருமதி வைரம் ராமமூர்த்தி அவர்கள் திருக்கரங்களினால் குத்துவிளக்கு ஏற்றப்பட அதனைத் தொடர்ந்துபேராசிரியர் உயர்திரு.க. இராமசாமி (முதுநிலை ஆய்வறிஞர்செம்மொழி தமிழாய்வு நிறுவனம்,சென்னை) அவர்கள்எழுத்தாளர் திரு.இமையம் அவர்கள்சிலம்பூர் கிராம ஊராட்சி ஒன்றியத்தலைவர் திரு.இரா.இளையபெருமாள் அவர்கள் விளக்கேற்றி நிகழ்ச்சியைத் துவங்கிவைத்தனர். சிலம்பூர் கிராம பள்ளிக்குழந்தைகள் இறைவணக்கமும்தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடி அனைவரையும் மகிழ்வித்தனர்.

தமிழ்க்குடிலின் அங்கத்தினரான திரு.ராமச்சந்திரன் அவர்கள் வரவேற்பு உரையாற்றினார். சிலம்பூர் கிராம ஊராட்சி மன்றத்தலைவர் திரு.இரா. இளையபெருமாள் அவர்கள் சிறப்புவிருந்தினர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

   பொன்பரப்பி கிராமத்தில் பிறந்து அழகாபுரம் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கி இந்திய மொழிகளின் நடுவன் நிறுவனத்தில்” பேராசிரியராக. 28.5 ஆண்டுகள் பணியாற்றிசெம்மொழி திட்டத்தை அமல்படுத்தும் மத்திய அரசாங்கத்தின் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் தலைவராக இருந்து பொறுப்பு அலுவலராக ஓய்வுப்பெற்று  தற்போது அதே நிறுவனத்தில் முதுநிலை ஆய்வறிஞராக பணியாற்றி வரும் பேராசிரியர் உயர்திரு.க.இராமசாமி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

அடுத்ததாகதமிழ்க்குடில் அறக்கட்டளையின் அறங்காவல் தலைவர்  கவிஞர்.திரு.தமிழ்க்காதலன்அவர்கள் தமிழ்க்குடில் அறிமுகம் மற்றும் தமிழ்க்குடில் கடந்துவந்த பாதை பற்றி விளக்கினார். அவரைத் தொடர்ந்து பேராசிரியர் திரு. க. இராமசாமி அவர்களின் சிறப்பு உரை இடம்பெற்றது.

கோவேறுக் கழுதைகள்  கதை மூலம் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமாகிபிறகு தனது பல்வேறு புதினங்கள்சிறுகதை தொகுப்புகள் மற்றும் மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள் மூலம் இலக்கியத்துறையில் தனக்கென ஒரு முத்திரை பதித்து பல விருதுகளை தனதாக்கி கொண்ட  எழுத்தாளர் திரு. இமையம் அவர்கள் சிறப்புவிருந்தினர் உரையாற்றினார்.

அடுத்ததாகதமிழ்க்குடில் அறக்கட்டளையின் தலைவர் அவர்களின் சிந்தனை உளி கொண்டுஅன்புள்ளங்கள் அனைவரின் உதவியோடு செதுக்கப்பட்ட நூலகசிற்பத்தினை பேராசிரியர் திரு.க.இராமசாமி அவர்கள் திறந்துவைத்து உயிரூட்டினார். தோழமைகள் மற்றும் நம் தமிழ்க்குடிலின் அன்புள்ளங்கள் அனைவரது  வாழ்த்துகள் இந்த நூலகத்திற்கு சக்தியூட்டும் விதமாக அமையும் என்ற நம்பிக்கையுடன் இனிதே துவக்கப்பட்டது.

நூலகத்திறப்பினை தொடர்ந்து திரு.இமையம் அவர்கள் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் அலுவலகத்தை திறந்துவைத்ததோடுதமிழ்க்குடில் நூலகத்திற்கு நூல்களும் வழங்கினார்.

பேராசிரியர் திரு.க.இராமசாமி அவர்கள் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் ஆண்டு அறிக்கையினை வெளியிடஎழுத்தாளர் திரு.இமையம் அவர்கள் பெற்றுக்கொண்டார். 

கிரீன் விசன் என்ற தன்னார்வத்தொண்டு நிறுவனத்தை சார்ந்த சகோதரர் மகேந்திரன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

விழாவின் இறுதி நிகழ்ச்சியாக சிறப்புவிருந்தினர்களுக்குநம் அறக்கட்டளையின்தலைவர்.கவிஞர்.திரு.தமிழ்க்காதலன் அவர்கள் நினைவுப்பரிசு வழங்கினார். பள்ளிக்குழந்தைகள் தேசியகீதம் பாட விழா இனிதே நிறைவுற்றது.           

தமிழரின் பாரம்பரிய விளையாட்டு போட்டி:
இந்திய மண்ணில் பெருகிவரும் மேலைநாட்டு மோகத்தால்அழிந்து கொண்டிருக்கும் நமது மண்ணின்பாரம்பரிய கலைகள் மற்றும் விளையாட்டுகளை மீட்டெடுக்கும் முயற்சியாக நமது பள்ளிக்குழந்தைகளுக்குதமிழரின் பாரம்பரிய விளையாட்டுப்போட்டிகள் நடத்துவது என முடிவு செய்துமுதற்கட்டமாக சிலம்பூர்கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவச் செல்வங்களுக்கிடையே நமது பாரம்பரியவிளையாட்டு பயிற்சி சுமார் 2 மாதம் அளித்து பின் விளையாட்டுப்போட்டி நடத்தப்பட்டதுஅதன் விபரம்வருமாறு:
அரியலூர் மாவட்டம் சிலம்பூர் கிராமத்தில் 25.01.14, 26.01.14 மற்றும் 27.01.14 (சனி ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில்ஆகிய மூன்று நாட்களும் கீழ்க்கண்ட போட்டிகளை தமிழ்க்குடில் நடத்தியது.  அரசுநடுநிலைப்பள்ளியில் பயிலும் 80 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகள்: 
1. உடற்பயிற்சி சார்ந்த விளையாட்டுகள் - ஓட்டப்பந்தயம்நீளம்   தாண்டுதல்கபடி.
2. 
மனப்பயிற்சி சார்ந்த விளையாட்டுகள் கோலாட்டம்கும்மிஇசை    நாற்காலி.
3. அறிவுசார்ந்த விளையாட்டுகள் சதுரங்கம்ஆடுபுலி ஆட்டம்கண்ணாமூச்சி. 
4. 
ஞாபக சக்தி சார்ந்த விளையாட்டுகள் - நடித்துக்காட்டுதல்ஒப்புவித்தல்பொருட்களைஅடையாளம் காணுதல்.
விளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கியதோடு, கலந்துகொண்ட அனைவருக்கும் பரிசும், கலந்துகொண்டமைக்கான சான்றிதழும் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.

தமிழ்க்குடில் அறக்கட்டளை
2013 - 2014 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை விகித அறிக்கை
வ. எண்
விவரங்கள்
ரூ.
செலவுவிகிதம் 100%
1
ஓராண்டு உள்வரவுகள்



ரொக்க கையிருப்பு:
கையிருப்பு: 215.00  மற்றும்  வங்கி இருப்பு:37565.44
37780.44


நன்கொடை உள்வரவு
200374.00

கடன் ரொக்க உள்வரவு
8174.00


ஓராண்டு மொத்த உள்வரவு
246328.44


ஓராண்டு செலவுகள்
200462.96

உட்பிரிவுகளின் அடிப்படையில் செலவு விகிதம்



எழுதுபொருள் செலவுகள்
3777.00
1.88 %

அஞ்சலகச்செலவுகள்
2968.00
1.48 %

பயணச்செலவுகள்
3015.00
1.50 %

பணியாளர் நலன் செலவுகள்
237.00
0.12 %

சேவைக்கட்டணம்
3000.00
1.50 %

அறப்பணி செலவுகள்
6067.00
3.02 %

எரிபொருள்
2550.00
1.27 %

இதர செலவுகள் (நூலகத்திறப்பு விழா செலவுகள்)
21297.00
10.63 %

வங்கிக்கட்டணம்
1614.96
0.80 %

அறைகலன்
300.00
0.15 %

மின்சாதனப்பொருட்கள்
5000.00
2.51 %

நூலக கட்டிட செலவுகள்
110637.00
55.20 %

கடன் திருப்பி செலுத்தியது
40000.00
19.96 %

ஆண்டு இறுதி கையிருப்பு



ரொக்கம் கையிருப்பு
1402.03


வங்கி இருப்பு
44463.45



45865.48


நன்றியுரை:
தமிழ்க்குடிலின் செயல்பாடுகளில் தங்களை இணைத்துக்கொண்டு தொடர்ந்து எங்களுடன்பயணிக்கும் நல்லிதயம் கொண்ட தோழமைகளுக்கும்இயன்ற பங்களிப்பையும்ஒத்துழைப்பையும் நல்கிநமது இலட்சியப் பயணத்துக்கு உறுதுணையாக இருந்து வரும் அன்பு உள்ளங்களுக்கும் தமிழ்க்குடிலின்சார்பில் அறங்காவலர்களின் நெஞ்சம் நெகிழ்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறோம்.
தொடரும் ஆண்டுகளிலும் உங்களின் நட்பும்ஆதரவும் நமது சமூகத்தை முன்னெடுத்துச் செல்லஉதவும் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறோம்.

தமிழ்க்குடில் அறக்கட்டளைக்காக,

நிர்வாகிகள்.

No comments:

Post a Comment

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__